மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் உறங்கிய கொண்டுஇருந்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வந்த பகுதியில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து சென்று வருகின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் மாவட்டத்தில் இருந்து மத்திய பிரதேசத்தை நோக்கி சில தொழிலாளர்கள் நடந்தே சென்றனர். நடந்துசென்று சோர்வு காரணமாக அந்த தொழிலாளர்கள் இரவு நேரத்தில் தண்டவாளத்தில் உறங்கிய போது அவர்கள் மீது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதியதில் 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் காயமடைந்த தொழிலாளர்கள் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவு ஒன்றை பத்திவிட்டுள்ளார். அதில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத்தில் நடந்த ரயில் விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது.ரயில்வே அமைச்சர் ஸ்ரீ பியூஷ் கோயலிடம் விபத்து குறித்து பேசினேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…
டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15,…
சென்னை : குணச்சித்திர நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னையில் நெற்றிரவு காலமானார். இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்…
சென்னை : போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் எனக் கூறப்படும்…