அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு நிதி கேட்டு தான் கொடுக்கவில்லை என்பதற்காக மிரட்டுகிறார்கள் என கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி அவர்கள் கூறியுள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த ராமர் கோயில் கட்டுவதற்கான நிதி இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் திரட்டப்பட்டு வருகிறது. பல்வறு மதத்தவர்கள் சாதி, சமயம் பாராமல் ராமர் கோவில் கட்டுவதற்கான நிதியைக் கொடுத்து வருகின்ற நிலையில், ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி கேட்டு மக்கள் மிரட்டப்படுவதாக கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கூறிய அவர், ராமர் கோவில் கட்டுவதற்கு நான் நிதி கொடுக்கவில்லை என்பதற்காக எனது வீட்டிற்கு ஒரு பெண் உட்பட 3 பேர் வந்து மிரட்டினார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் முக்கியமான பிரச்சினை இது எனவும், ஆனால் ராமர் கோயில் கட்டுகிறோம் எனும் பெயரில் மற்றவர்களை அச்சுறுத்தி பணம் சேகரிக்கிறார்கள், அப்படி சேகரிக்கப்படும் பணத்தை நிர்வகிப்பது குறித்த வெளிப்படைத்தன்மை எங்கே எனவும் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…
சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…