ஆட்சி செய்த அரசுகள் பல்வேறு துறைகளில் வளர்ச்சியைக் கவனிக்கவில்லை -பிரதமர் மோடி

Published by
Venu

மத்திய அரசு மற்றும் அசாம் அரசு  உள்கட்டமைப்பை உருவாக்க ஒத்துழைப்புடன் செயல்படுகின்றது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இன்று அசாம் மாநிலத்திற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். தெமாஜியில் சிலாபத்தர் என்னுமிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ,பிரதமர் மோடி முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதன் பின் பிரதமர் மோடி பேசுகையில்,மத்திய அரசு மற்றும் அசாம் அரசு  உள்கட்டமைப்பை உருவாக்க ஒத்துழைப்புடன் செயல்படுகின்றன. மாநிலத்திற்கு பெரும் ஆற்றல் இருந்தபோதிலும், இதற்கு முன் ஆட்சி செய்த அரசுகள் பல்வேறு துறைகளில் வளர்ச்சியைக் கவனிக்கவில்லை. அசாமின் தேநீர், சுற்றுலா, கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் மாநிலத்தின் தன்னம்பிக்கையை பலப்படுத்தும்.போகிபீல் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.பிரம்மபுத்திராவில் உள்ள கலியபொமோரா பாலம் அசாமின் இணைப்பை மேம்படுத்தும். நான்கு வழிச்சாலையான தேசிய நெடுஞ்சாலை பணிகளும் நடந்து வருகின்றன.

அசாம் அரசாங்கத்தின் முயற்சிகள் காரணமாக, மாநிலத்தில் 20 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. புதிய தேசிய கல்விக் கொள்கையை விரைவாக நடைமுறைப்படுத்துவதில் மாநிலமும் செயல்படுகிறது. தேயிலை தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் பழங்குடி மக்களுக்கு பயனளிக்கும் பிராந்திய மொழியில் கல்வியில் தேசிய கல்விக் கொள்கை கவனம் செலுத்துகிறது என்று பேசினார்.

Published by
Venu
Tags: #PMModiassam

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

4 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

5 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

6 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

7 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

7 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

8 hours ago