அமித்ஷா கூறுவது தவறு.! புல்வாமா தாக்குதல் குறித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பிய காஷ்மீர் முன்னாள் ஆளுநர்.!

Published by
மணிகண்டன்

ஆளுநர் பதவியில் இருக்கும் போதே புல்வாமா தாக்குதல் பற்றி நான் கேள்வி எழுப்பிவிட்டேன் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறினார். 

கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு வாகனங்களில் சென்று கொண்டிருந்த 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அப்போது ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் மத்திய உள்துறை மீதும் , பிரதமர் மோடி மீதும் விமர்சனங்களை முன்வைத்தார்.

இந்த தாக்குதலில், உளவுத்துறை தோல்வியடைந்ததாகவும், பாதுகாப்பு வீரர்கள் செல்வதற்கு விமானம் தர உள்துறை மறுத்துவிட்டதாகவும் அதனால் தான் தரைவழி பயணத்தில் இந்த அசம்பாவிதம் நடைபெற்றதாகவும் சமீபத்தில் சத்யபால் மாலிக் குற்றம் சாட்டினார். மேலும், பிரதமர் மோடியிடம் இதனை பற்றி கூறும்போதும், இதனை பற்றி வெளியில் சொல்ல வேண்டாம் என அமைதியாக இருக்க கூறினார் எனவும் மாலிக் ஒரு தனியார் செய்தி நிறுவன பேட்டியில் குற்றம் சாட்டினார்.

[File Image]
இந்த குற்றசாட்டுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளிக்கையில்,  ‘ பாஜக மூடிமறைக்க வேண்டிய எதையும் செய்யவில்லை. அதனை எங்களால் முழு நம்பிக்கையுடன் சொல்ல முடியும். எங்களை (பாஜக) விட்டு பிரிந்த பிறகு யாராவது (சத்யபால் மாலிக்) குற்றச்சாட்டுகளை முன்வைத்தால், அதை ஊடகங்களும் மக்களும்  கண்டுகொள்ள கூடாது.என குறிப்பிட்டு இருந்தார்.

[File Image]
அமித்ஷாவின் கருத்துக்கள் குறித்து பதிலளிக்கும் வகையில் ராஜஸ்தானில் பேசிய சத்யபால் மாலிக், நான் ஆளுநர் பதவியில் இருக்கும் போதே, அந்த தாக்குதல் நடந்த சமயத்திலேயே அந்த கேள்விகளை எழுப்பிவிட்டேன். என கூறினார். மேலும், அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் பற்றி மாலிக் கூறுகையில், பாஜக வெற்றி பெற வாழ்த்துகிறேன், ஆனால் அரசியலிலும் தேர்தல்களிலும் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. தற்போதைய சூழ்நிலை அவர்களுக்கு (பாஜக) கடினமாக உள்ளது, அதானி விவகாரத்தில் பிரதமர் மோடியின் மௌனம் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதே போல, புல்வாமா விவகாரம் குறித்தும் பிரதமர் பேச வேண்டும் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும்…

17 minutes ago

நீலகிரியில் வெளுத்து ஊத்தும் கனமழை! இந்த இடங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

சென்னை : நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உதாரணமாக உதகை, குந்தா, கூடலூர், மற்றும்…

30 minutes ago

குறுவை சாகுபடி: கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

தஞ்சாவூர் : கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி…

12 hours ago

”நீங்க இல்லாம நான் என்ன பண்ண போறேன்னு தெரியல பா” – உணர்ச்சி வசப்பட்டு பேசிய விஜய்!

சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு…

12 hours ago

புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு…

13 hours ago

சென்னை அண்ணா நகரில் அமலுக்கு வருகிறது ‘ஸ்மார்ட் பார்க்கிங்’ திட்டம்.!

சென்னை : சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட்…

14 hours ago