இலவச டயாலிசிஸ் திட்டம் – கேரளா முதல்வர் அறிவிப்பு..!

Published by
Castro Murugan

நோயாளிகள் மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இலவசமாக டயாலிசிஸ் செய்துகொள்ளும் படி “பெரிட்டோனியல் டயாலிசிஸ் திட்டம்” 11 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

இனி நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே டயாலிசிஸ் செய்து கொள்ளலாம். கேரளாவின் சுகாதாரத் துறை 11 மாவட்டங்களில் புதிய பெரிட்டோனியல் டயாலிசிஸ் திட்டத்தை வீட்டிலேயே டயாலிசிஸ் செய்வதற்கு வசதியாக அறிமுகப்படுத்தியுள்ளது என கேரளா முதல்வர்  பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

பெரிட்டோனியல் டயாலிசிஸ் திட்டத்தின் அதிகரிப்பு ஹீமோ டயாலிசிஸை படிப்படியாகக் குறைப்பதன் ஒரு பகுதியாகும். தற்போது இந்த வசதி திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் உள்ளது. மீதமுள்ள மாவட்டங்களில் பெரிட்டோனியல் டயாலிசிஸ் விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் தவிர, சுகாதாரத் துறையின் கீழ் உள்ள குடும்ப நல மையங்கள் முதல் மாவட்ட மற்றும் பொது மருத்துவமனைகள் வரை ஒவ்வொரு மாதமும் 36,000 முதல் 39,000 டயாலிசிஸ் அமர்வுகள் நடத்தப்படுகின்றன. தாலுகா, பொது மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் சில சமூக சுகாதார மையங்கள் மற்றும் குடும்ப சுகாதார மையங்களில் டயாலிசிஸ் செய்யப்படுகிறது. 92 மருத்துவமனைகளில் 937 டயாலிசிஸ் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

டயாலிசிஸ் செய்துகொள்பவர்களுக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டால், பின்னர் டயாலிசிஸ் செய்ய மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். இது தொடர்பாக புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட மருத்துவ அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

ஹனிமூன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்..! வசமாக சிக்கிய புதுப்பெண்.., பின்னணி என்ன?

ஹனிமூன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்..! வசமாக சிக்கிய புதுப்பெண்.., பின்னணி என்ன?

மேகாலயா : இந்தூரைச் சேர்ந்த ராஜா ராகுவன்ஷி மற்றும் சோனம் ராகுவன்ஷி என்ற தம்பதியினர் கடந்த மே 11ம் தேதி…

50 minutes ago

டெஸ்ட் போட்டிக்கான மைதானங்களை மாற்றி பிசிசிஐ அறிவிப்பு.!

டெல்லி : இந்த வருடம் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளை சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளது.…

2 hours ago

கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து.!

கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையில் ஒரு சரக்குக் கப்பல் தீப்பிடித்தது. இந்தக் கப்பல் சிங்கப்பூர்…

2 hours ago

தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக அருண்ராஜ் நியமனம்.!

சென்னை : தவெகவில் இன்று புதிதாக இணைந்த முன்னாள் IRS அதிகாரி அருண்ராஜ்-க்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கி…

3 hours ago

இன்று இந்த 11 மாவட்டங்களில் மழை வெளுக்கும்! அலர்ட் விட்ட வானிலை மையம்!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு…

4 hours ago

“இனி அரசு விடுதிகளில் பெண் காவலாளிகளை நியமிக்க முடிவு” – அமைச்சர் கீதா ஜீவன்

சென்னை : தாம்பரம் பகுதியில் உள்ள அரசு விடுதியில் தங்கி 8-ஆம் வகுப்பு படித்து வரும் 13-வயது சிறுமி ஒருவருக்கு பாலியல்…

4 hours ago