பிரபல ரவுடி விகாஸ் துபேயின் நண்பன் சுட்டுக்கொலை.!

Published by
murugan

உத்தரபிரதேசத்தின் கான்பூரை சேர்ந்த விகாஸ் துபே பிரபல ரவுடியான இவன் மீது கொலை, கொள்ளை, கடத்தல் என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சமீபத்தில் ஒருவரை கொலை செய்ய முயன்றதாக கூறி இவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் விகாஸ் துபேவை கைது செய்ய கடந்த ஜூலை 2- ஆம் தேதி அவனது வீட்டுக்கு போலீசார் சென்றனர். அப்போது, விகாஸ் துபே பிரபல ரவுடி என்பதால் போலீஸ் துணை சூப்பிரண்டு, சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் என பலர் துப்பாக்கியுடன் சென்றனர்.

ஆனால், போலீசார் பிடிக்க வரும் தகவல் விகாஸ் துபேவுக்கு தெரியவர தனது கூட்டாளிகளோடு பதுங்கி இருந்தான். அப்போது, போலீசார் அவனது வீட்டை நோக்கி வரும் போது போலீசார் மீது  சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த சம்பவத்தில் போலீஸ் துணைசூப்பிரண்டு, 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிழந்தனர். மேலும் 6 போலீசார்  படு காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தப்பி ஓடிய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க போலீஸ் அதிரடிப்படையை அமைத்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை ரவுடி விகாஷ் துபேவின் நெருங்கிய நண்பர் அமர் துபேவை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

Published by
murugan

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

16 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago