பிரபல ரவுடி விகாஸ் துபேயின் நண்பன் சுட்டுக்கொலை.!

Published by
murugan

உத்தரபிரதேசத்தின் கான்பூரை சேர்ந்த விகாஸ் துபே பிரபல ரவுடியான இவன் மீது கொலை, கொள்ளை, கடத்தல் என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சமீபத்தில் ஒருவரை கொலை செய்ய முயன்றதாக கூறி இவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் விகாஸ் துபேவை கைது செய்ய கடந்த ஜூலை 2- ஆம் தேதி அவனது வீட்டுக்கு போலீசார் சென்றனர். அப்போது, விகாஸ் துபே பிரபல ரவுடி என்பதால் போலீஸ் துணை சூப்பிரண்டு, சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் என பலர் துப்பாக்கியுடன் சென்றனர்.

ஆனால், போலீசார் பிடிக்க வரும் தகவல் விகாஸ் துபேவுக்கு தெரியவர தனது கூட்டாளிகளோடு பதுங்கி இருந்தான். அப்போது, போலீசார் அவனது வீட்டை நோக்கி வரும் போது போலீசார் மீது  சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த சம்பவத்தில் போலீஸ் துணைசூப்பிரண்டு, 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிழந்தனர். மேலும் 6 போலீசார்  படு காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தப்பி ஓடிய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க போலீஸ் அதிரடிப்படையை அமைத்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை ரவுடி விகாஷ் துபேவின் நெருங்கிய நண்பர் அமர் துபேவை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

Published by
murugan

Recent Posts

“பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது?” – செல்வப்பெருந்தகை பேச்சு!

“பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது?” – செல்வப்பெருந்தகை பேச்சு!

விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…

11 seconds ago

இனிமே இது தான் ரூல்ஸ்…சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!

டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…

13 minutes ago

விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி! மத்திய அரசு எடுத்த முடிவு!

டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…

57 minutes ago

“விலங்குகள் தாக்குவது இயல்பு”…அலட்சியமாக பதில் சொன்ன ராஜகண்ணப்பன்.. எழுந்த கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…

1 hour ago

”ரயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும்” – ரயில்வே துறை இணை அமைச்சர்.!

சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு…

2 hours ago

”கூமாப்பட்டி – பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும்” – விருதுநகர் ஆட்சியர் உறுதி.!

விருதுநகர் : ஊட்டி, கொடைக்கானல் என பிரபல சுற்றுலாத் தலங்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டுத் திடீரென கூமாபட்டி கிராமம் வலைத்தளங்களில்…

2 hours ago