Categories: இந்தியா

ஜப்பான் முதல் ஆஸ்திரேலியா வரை… பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி..!!

Published by
பால முருகன்

பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு வரும் மே 19 முதல் 24-ஆம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார். மே 19 முதல் 21 வரை ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்குச் செல்லும் மோடி,ஜி7 மேம்பட்ட பொருளாதாரங்களின் வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார், அதில் அவர் உணவு, உரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட உலகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானில் பயணத்தை முடித்துவிட்டு மோடி,  பப்புவா நியூ கினியாவில் உள்ள போர்ட் மோர்ஸ்பிக்கு மே 22 அன்று செல்கிறார். அங்கு  இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் (FIPIC) மூன்றாவது உச்சிமாநாட்டை பிரதமர் ஜேம்ஸ் மராப்புடன் இணைந்து  நடத்துகிறார்.

அதன் பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் பிரதமர் மோடி,  அங்கு சிட்னி நகரில் நடைபெறும் குவாட் நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் தலைமையில் நடைபெறும் அந்த குவாட் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

மேலும், 23-ஆம் தேதி பிரதமர் மோடி ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிசுடன் இருதரப்பு சந்திப்பை நடத்திய பிறகு, சிட்னி நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

6 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

7 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

8 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

8 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

8 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

9 hours ago