Categories: இந்தியா

G20 Food Menu: உலகத் தலைவர்கள் பெயர்களில் உணவு வகைகள்.!

Published by
கெளதம்
உலகமே தற்போது உற்று நோக்கும் வகையில் இந்தியா தலைமை தாங்கி நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு, தலைநகர் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பொருளாதார மேம்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 20 நாட்டுத் தலைவர்கள் ஒரே இடத்தில் கூடி உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லியில் பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளன.
இன்றும் நாளையும் நடக்கவுள்ள இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள உலகநாட்டுத் தலைவர்களை வரவேற்று, பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இந்த மாநாடு முடிந்த பின்பு, இன்று இரவு 7 மணிக்கு ஜி20 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருந்து அளிக்கிறார்.
இந்நிலையில், சைவ உணவு மெனு ஒன்றில், அமெரிக்க ஜனாதிபதி பெயரை குறிக்கும் வகையில், அதில் “பைடன் தந்தூரி மாலை ப்ரோக்கோலி” என்று பெயரிடப்பட்டது. அசைவ மெனுவில், “ட்ரம்ப் ஹாஃப் தந்தூர் சிக்கன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பைக் குறிக்கிறது.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், இந்த மெனு ஜனாதிபதியின் இரவு விருந்துக்கானது அல்ல, மாறாக பாரத் மண்டபத்தில் உலக தலைவர்கள் உணவருந்துவதற்கானது என்று விமர்சனம் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள். ஆனால், இந்த மெனு விருந்திற்கான மெனுவா? அல்லது நெட்டிசன்கள் கிரியேட் செய்த மெனுவா? என்று தெரிவில்லை. இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published by
கெளதம்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

14 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

15 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

15 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

16 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

17 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

18 hours ago