Categories: இந்தியா

G20 Summit: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரதமர் மோடியுடன் இருதரப்பு சந்திப்பு..!

Published by
செந்தில்குமார்

இந்தியா தலைமை தாங்கி நடத்தி வரும் இந்த ஆண்டிற்கான ஜி-20 உச்சி மாநாட்டு, வரும் செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, தென் கொரியா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா என 20 நாட்டுத் தலைவர்கள் ஒரே இடத்தில் வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லியில் பலப்படுத்தப்பட்டு, விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதன்படி, ஜி20 உச்சி மாநாட்டையொட்டி விதிக்கப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதால், கனரக, நடுத்தர மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் இன்று இரவு 9 மணி முதல் செப்டம்பர் 10ம் தேதி வரை டெல்லிக்குள் செல்ல அனுமதிக்கப்படாது. ஆட்டோரிக்ஷா மற்றும் டாக்சிகளுக்கும் இதே போன்ற கட்டுப்பாடு விதிக்கப்படும்.

இந்நிலையில், ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், உச்சிமாநாட்டின் முடிவில் செப்டம்பர் 10ம் தேதி மதிய உணவு வேலையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு சந்திப்பை நடத்த உள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

10 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago