Categories: இந்தியா

G20 Summit : அடுத்த ஜி20 தலைமை பிரேசில்.! பொறுப்பை பிரேசில் அதிபரிடம் ஒப்படைத்தார் இந்திய பிரதமர் மோடி.!

Published by
மணிகண்டன்

கடந்த முறை 17வது ஜி20 கூட்டத்தை இந்தோனீசியா தலைமை ஏற்று நடத்தி வந்த நிலையில், இதனை தொடர்ந்து இந்தியா வசம் ஜி20  கூட்டமைப்பை நடத்தும் தலைமை பொறுப்பு கடந்த நவம்பர் மாதம் ஒப்படைக்கப்பட்டது. இதில் ஜி20 நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மேம்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து இந்தியாவில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்தது.

இதனை தொடர்ந்து ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் 18வது ஜி20 உச்சி மாநாடு நேற்றும் இன்றும் நடைபெற்றது. டெல்லி ராஜ்கோட்டில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜி20 உறுப்பு நாடு தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த மாநாடானது ‘ஒரேபூமி ஒரே குடும்பம்’ என்ற தலைப்பில் 2 கட்டமாக ஆலோசனை நடைபெற்றது. இன்று இரண்டாம் நாள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் முன்னர், ஜி20 மாநாடு தலைவர்கள், அனைவரும் டெல்லி ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்றனர். அங்கு மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி20 தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து பாரத் மண்டபத்தில் ஜி20 கூட்டம் நடைபெற்றது. இந்த இரண்டாம் நாள் இறுதி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஒரே பூமி, ஒரே குடும்பம் பற்றி நேற்றைய மாநாட்டில் நாம் ஆலோசித்தோம். இன்று ஜி20 கூட்டமைப்பு ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் பற்றிப் பேசுவதற்கு ஏற்ற தளமாக உருவாகியுள்ள திருப்தி அளிக்கிறது. என பேசினார்.

இதனை அடுத்து அடுத்த ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் பொறுப்பை பிரதமர் மோடி பிரேசிலுக்கு வழங்கினார். இனி அடுத்து வரும் ஜி20 மாநாடு பிரேசில் தலைமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரத்தை பிரதமர் மோடி பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு வழங்கினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

8 minutes ago

விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…

51 minutes ago

சபாஷ் சரியான போட்டி…குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா!

குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…

2 hours ago

மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்!

சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…

2 hours ago

தற்காலிகமாக விலகிய தவெக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்! காரணம் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…

2 hours ago

ட்ரம்ப்புடன் மோதல்..புதிய கட்சியை தொடங்கியதாக அறிவித்த எலான் மஸ்க்!

நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…

4 hours ago