Categories: இந்தியா

பேய் இருக்கா இல்லையா? மாணவர்கள் பயத்தை போக்க ஆசிரியர் செய்த செயல்! வைரலாகும் வீடியோ ..!

Published by
பால முருகன்

தெலுங்கானா : பொதுவாகவே சிறிய வயதுடையவர்களுக்கு பேய் என்ற பெயரை கேட்டாலே பயந்துவிடுவார்கள். பின் வளர வளர அப்படி எல்லாம் இல்லை என்பது போல சொல்லி கொடுத்தால் மட்டும் தான் அவர்கள் அந்த விஷயத்திற்கு பயப்படாமல் இருப்பார்கள். அப்படி தான் தெலுங்கானாவில் உள்ள பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பேய் இல்லை என்பதை எடுத்து உரைத்து கூறி தைரியம் வர வைக்கும் வகையில் ஒரு செய்யலை செய்து இருக்கிறார்.

ஆதிலாபாத் ஜைனாத் மண்டலில் உள்ள ஆனந்த்பூர் தொடக்கப் பள்ளி வளாகத்தில் மரம் விழுந்ததால், காலி அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்ட மாணவர்களிடையே பேய் இருப்பதாக பீதி ஏற்பட்டது.அந்த அறைக்குள் பேய் இருக்கிறது நாங்கள் வரமாட்டோம் என மாணவர்கள் பலரும் பயத்தில் இருந்துகொண்டு வர மறுத்துள்ளனர்.

இதனை அறிந்துகொண்ட அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர் பேய் எல்லாம் இல்லை என்று கூறிவிட்டு நான் இன்று இரவு முழுவதும் அந்த அறையில் தூங்குகிறேன் அப்போது உங்களுக்கு பேய் பயம் போகுமா? என்று கேட்டுவிட்டு ஒரு நாள் இரவு முழுவதும் அந்த ஆசிரியர் அந்த அறையில் தூங்கி எழுந்தார். காலையில் பள்ளிக்கு சென்று பார்த்தபோது ஆசிரியர் நன்றாக தூங்கி கொண்டு இருந்தார்.

இதனை பார்த்த மாணவர்கள் மகிழ்ச்சியுடன் அறையில் பேய் எல்லாம் இல்லை என்று கூறி ஆசிரியரை எழுப்பினார்கள். பேய் இல்லை என்பதை புரிய வைத்து அவர்களுக்கு தைரியத்தை கொடுக்க ஆசிரியர் செய்த இந்த செயலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஆசிரியரை பாராட்டி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி வேலை நிறுத்தம்! காரணம் என்ன?

சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…

18 minutes ago

‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!

பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…

1 hour ago

நீலகிரி, கோவை மொத்தம் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…

2 hours ago

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? ஏ.பி. அபூபக்கர் சொன்ன முக்கிய தகவல்!

சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…

2 hours ago

சாத்தான்குளம் வழக்கில் புதிய திருப்பம்! ஸ்ரீதர் அப்ரூவராக மாற எதிர்ப்பு!

மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…

3 hours ago