ஜியோவில் ரூ.33 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது கூகுள் நிறுவனம்.
கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியுடன், கூகுள் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் சுந்தர் பிச்சை காணொலி மூலமாக கலந்துரையாடினார். இதன் பின் இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு அடுத்த 5-7 ஆண்டுகளில் கூகுள் நிறுவனம் இந்தியாவில் ரூ.75,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை இயக்குனர் சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.
கடந்த சில மாதங்களாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் உலகின் முன்னணி நிறுவனங்களான ஃபேஸ்புக்,இன்டெல் ,குவால்காம் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றது. இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி பேசுகையில் , ரிலையன்ஸின் ஜியோ நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் ரூ.33,737 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.ஜியோவின் 7.7% பங்குகளை வாங்க கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து என்ட்ரி லெவல் 4ஜி/5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே உலக பணக்காரர்கள் பட்டியலில் கூகுள் துணை நிறுவனர் லாரி பேஜை பின்னுக்கு தள்ளி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி, 6ஆம் இடத்திற்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா : பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு…
பெங்களூர் : பெங்களூருவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர், 50-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதற்கு அரசின்…
பெங்களூர் : 18 வருட காத்திருப்புக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றது.…
பெங்களூரு : 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் இறுதி போட்டியான நேற்று பஞ்சாப் அணியை வென்று ஆர்சிபி முதல்முறையாக ஐபிஎல்…
பெங்களூரு : 18 ஆண்டு தவத்திற்கு பின், ஐபிஎல் தொடரில், ஆர்சிபி முதல்முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது. இதனால்,…
பெங்களூரு : 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில், நேற்றைய தினம் நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வென்று ஆர்சிபி முதல்முறையாக…