இன்று குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடல் போபாலில் தகனம் ..!

Published by
murugan

மத்தியபிரதேசம் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடல் போபாலில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது

டிசம்பர் 8 ஆம் தேதி நிகழ்ந்த IAF ஹெலிகாப்டர் விபத்தில், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் உட்பட 13 பேர் இறந்தனர்.இந்த விபத்தில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே உயிர் பிழைத்தார். ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்த வருண் சிங் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் 7 நாட்கள் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடல் நேற்று பிற்பகல் 2.35 மணியளவில் பெங்களூரில் இருந்து போபால் விமான நிலையத்திற்கு ராணுவ விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. இங்கு மத்திய பிரதேச முதல்வர் முதல்வர் சிவராஜ் சிங் , அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தினர்.  இதையடுத்து ராணுவ வாகனத்தில் போபால் சன் சிட்டி காலனியில் உள்ள அவரது வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் ராணுவ வாகனத்தை பின்தொடர்ந்து சென்று சிறிது தூரம் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு சந்த் ஹிர்தராம் நகரில் (பைர்கர்) இராணுவ மரியாதையுடன் குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடல் தகனம் செய்யப்படுகிறது.

சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்” என்று முதல்வர் சிவராஜ் சிங் அறிவித்துள்ளார்.

 

Published by
murugan

Recent Posts

ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி வேலை நிறுத்தம்! காரணம் என்ன?

ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி வேலை நிறுத்தம்! காரணம் என்ன?

சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…

25 minutes ago

‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!

பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…

2 hours ago

நீலகிரி, கோவை மொத்தம் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…

2 hours ago

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? ஏ.பி. அபூபக்கர் சொன்ன முக்கிய தகவல்!

சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…

3 hours ago

சாத்தான்குளம் வழக்கில் புதிய திருப்பம்! ஸ்ரீதர் அப்ரூவராக மாற எதிர்ப்பு!

மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…

3 hours ago