GST Collecthigh [ImageSource iStock]
நாட்டின் வலுவான வளர்ச்சியால் கடந்த ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வரி வசூல், அதிகபட்சமாக ரூ.1.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி(GST) வசூல் ஏப்ரல் மாதத்தில் 11.6% அதிகரித்து ரூ.1,87,035 கோடியாக உயர்ந்துள்ளது. இது ஜூலை 2017 முதல் தொடங்கப்பட்டதிலிருந்து மிக உயர்ந்த அளவைப் பதிவு செய்துள்ளன என்று நிதி அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முந்தைய அதிகபட்சமான ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1,67,540 கோடி, ஒரு வருடத்திற்கு முன்பு வசூல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி, இது குறித்து கூறும்போது குறைந்த வரி விகிதங்கள் இருந்தபோதிலும் வரி வசூல் அதிகரித்து வருவது, ஜிஎஸ்டி எவ்வாறு ஒருங்கிணைப்பு மற்றும் இணக்கத்தை அதிகரித்துள்ளது என்பதன் வெற்றியைக் காட்டுகிறது எனக் குறிப்பிட்டார்.
நிதி அமைச்சகத்தின் கூற்றுப்படி, உள்நாட்டு விற்பனையில் இருந்து வசூல் 16% வளர்ச்சியடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் 8.8% உயர்வு அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரலில், சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன, சிக்கிம் 61% அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதைத் தொடர்ந்து மிசோரம் (53%), ஜம்மு&காஷ்மீர் (44%), லடாக் (43%) மற்றும் கோவா & மணிப்பூர் (தலா 32%). ம.பி. (28%), கர்நாடகா (23%), மகாராஷ்டிரா & உ.பி (தலா 21%) மற்றும் தமிழ்நாடு (19%) ஆகியவை தேசிய சராசரியை விட வேகமாக வளர்ச்சியடைந்துள்ளன, ஒடிசா (3%), குஜராத் (4%), ராஜஸ்தான் (5%), ஆந்திரப் பிரதேசம் (6%) மற்றும் டெல்லி (8%) ஆகியவை பின்தங்கியுள்ளன.
மேலும் ஏப்ரல் 20இல் 9.8 லட்சம் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதன் மூலம் ஒரே நாளில் ரூ.68,228 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என்றும், கடந்த ஆண்டு இதே நாளில் 9.6 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.57,846 கோடியாக இருந்த, முந்தைய சாதனையை முறியடித்ததாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…