ஹரியானா அரசு குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை மற்றும் தடையை ஒரு வருடத்திற்கு நீட்டித்தது.
குட்கா, பான் மசாலா விற்பனை மற்றும் தயாரிப்பதற்கான தடையை மேலும் ஒரு வருடத்திற்கு ஹரியானா அரசு நேற்று நீட்டித்தது. இதுதொடர்பாக மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, பொது இடங்களில் மக்கள் எச்சில் துப்பக்கூடாது என்பதற்காக ஹரியானா அரசு குட்கா மற்றும் பான் மசாலா போன்ற அனைத்து புகையிலை பொருட்களின் விற்பனை மற்றும் உற்பத்திக்கு ஒரு வருடம் தடை விதித்தது. அதாவது கடந்த செப்டம்பர் 7 -ஆம் தேதி வரை தடை செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க மாநில அரசு நேற்று முடிவு செய்தது. இதனால், ஹரியானாவில் அடுத்தாண்டு செப்டம்பர் வரை குட்கா மற்றும் பான் மசாலா போன்ற அனைத்து புகையிலை பொருட்களின் விற்பனை மற்றும் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…