கெஜ்ரிவாலை சுட்டிகாட்டிய ஹேமந்த் சோரன்.! தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்.!

Published by
மணிகண்டன்

சென்னை: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் கிடையாது. – உச்சநீதிமன்றம் உத்தரவு.

ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் இருக்கிறார். இவர் தனது கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இதே போன்ற வழக்கில் கைதாகி இருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால நிவாரணமாக ஜூன் 1 வரையில் ஜாமீன் வழங்கியது. மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை கருத்தில் கொண்டு இந்த ஜாமீன் அளிக்கப்படுவதாகவும் நீதிபதி அமர்வு குறிப்பிட்டனர். இதே தீர்ப்பை மேற்கோள்காட்டி ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் வழக்கில் இடைக்கால நிவாரணம் கோரப்பட்டது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறையினர் தரப்பு கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவால் கைதும் , சோரன் கைதும் ஒன்றல்ல என்றும், வழக்கு விசாரணையின் போதே சாட்சிகளை கலைக்க ஹேமந்த் சோரன் முயற்சித்தார் என்றும் பல்வேறு வாதங்களை முன்வைத்தனர்.

இதனை அடுத்து இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, ஹேமந்த் சோரன் கைதுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை அடுத்து ஹேமந்த் சோரன் தரப்பு தாக்கல் செய்த மனு திரும்ப பெறப்பட்டது.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

இந்தியா போட்டியை நீங்க பாத்துக்கோங்க…நான் BBL போறேன்! இங்கிலாந்துக்கு டாடா சொன்ன ஆர்ச்சர்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின்…

1 minute ago

அடுத்தடுத்து கோளாறாகும் ஏர் இந்தியா விமானங்கள்? பதற்றத்தில் பயணிகள்!

கொல்கத்தா : ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டு வருவதால் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்து இனிமேல் விமானத்தில்…

35 minutes ago

டெஹ்ரானில் இருந்து உடனடியாக அனைவரும் வெளியேறுங்கள்! அலர்ட் கொடுத்த டொனால்ட் டிரம்ப்!

இஸ்ரேல் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட்…

1 hour ago

இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

2 hours ago

ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகத்தை நொறுக்கிய இஸ்ரேல்.! தாக்குதலின் நேரடியாக ஒளிபரப்பு காட்சி..,

இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…

10 hours ago

மதிமுக அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர் கல் வீச்சு தாக்கியதால் பரபரப்பு.!

சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…

10 hours ago