ஹேமந்த் சோரன் அதிரடி.! பாஜக அரசு தொடர்ந்த போராட்ட வழக்குகள் வாபஸ்.!

Published by
murugan
  • ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் நேற்று முதலமைச்சராக பதவி ஏற்றார்.
  • போராட்டத்தில்  ஈடுபட்டபோராட்டக்காரர்கள் மீது பாஜக அரசு சார்பில் தொடர்ந்த ஆயிரக்கணக்கான வழக்குகளை வாபஸ் பெறுவதாக கூறினார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 30 -ம் தேதி தொடங்கி, இந்த மாதம் 20-ஆம் தேதி வரை 5 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தனித்தும் ,  ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த  பாஜக 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. மெகா கூட்டணி வைத்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளிலும்,காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ராஷ்டிரீய ஜனதா தளம் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி 47 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது.

இந்நிலையில்  ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் நேற்று முதலமைச்சராக பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி , மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி , தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பதவி ஏற்பு விழா முடிந்ததும் ஹேமந்த் சோரன் அலுவலகத்துக்கு சென்று முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.பின்னர் சிறிது நேரத்தில் முதல் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக  அரசு சார்பில் தொடர்ந்த ஆயிரக்கணக்கான வழக்குகளை வாபஸ் பெறுவதாக கூறினார்.

கடந்த ஆண்டு மே மாதம் ஜார்க்கண்டில் இரட்டை குத்தகை சட்டங்கள் தொடர்பான திருத்த மசோதாவை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டம் நடத்தினர் .அப்போது போராட்டத்தில்  ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் மீது போலீசார் வழக்குகள் பதிவு செய்தனர். தற்போது இந்த வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெறுவதாக ஹேமந்த் சோரன் உத்திரவிட்டார்.

 

Published by
murugan

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

9 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

10 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

10 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

11 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

11 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

12 hours ago