aerial survey [Image Source : Twitter/file image]
பிபார்ஜாய் புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வான்வழி ஆய்வு நடத்த உள்ளார்.
மத்திய அரபிக்கடல் பகுதியில் உருவான பிபார்ஜாய் புயல் மிக தீவிர புயலாக வடகிழக்கு நோக்கி நகர்ந்து சௌராஷ்டிரா-கட்ச் பகுதியை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரைக்கும், குஜராத்தின் ஜகாவ் துறைமுகத்திற்கும் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 115-125 கிமீ வேகத்தில் வீசியது.
இதில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. இரவு சுமார் 524 கிராமங்கள் இருளில் மூழ்கியது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஜூன் 17ஆம் தேதி குஜராத்தின் கட்ச் மற்றும் ஜக்காவ் துறைமுகத்திற்குச் சென்று பிபார்ஜாய் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமையை ஆய்வு செய்ய உள்ளார்.
கட்ச் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் வான்வழி ஆய்வுக்குப் பிறகு, கட்ச் மாவட்டத்தின் பச்சாவ் மற்றும் மாண்ட்வியில் பாதிக்கப்பட்ட மக்களையும் அவர் சந்திக்கிறார். முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் அவர் கூட்டம் நடத்தி நிலைமையை ஆய்வு செய்யவுள்ளார். இதற்கிடையில், வடக்கு குஜராத், கட்ச் மற்றும் சவுராஷ்டிராவில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…