கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களின் அன்றாட வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல தொழிலாளர்கள் இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு தற்போது மத்திய உள்துறை அமைச்சகம், ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது, வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்கு வந்துள்ளவர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் தங்கியுள்ள வாடகை வீடுகளில் வீட்டு உரிமையாளர்கள் ஒரு மாத வீட்டு வாடகை வசூல் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், வாடகை வீட்டில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள், மாணவர்களை வீட்டை காலி செய்ய வற்புறுத்தக்கூடாது அவ்வாறு செய்தால், மாநில அரசுகள் உரிய நடவடிக்கை வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஊரடங்கை காரணம் காட்டி, எந்த தொழில் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு இருப்பிடம், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை மாநில அரசு செய்து தர வேண்டும். எனவும், வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் எனவும் மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, கௌரவப் பலகையில் இடம்பெற்றதை பெருமையாகக்…
குஜராத் : மாநிலம் வதோதரா மாவட்டத்தில், மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா-முஜ்பூர் பாலம் 2025…
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…