மத்திய பிரதேசத்தில் சூடாக சப்பாத்தி சுட்டுத்தரவில்லை என மாமியாரை தடியால் அடித்து கொன்ற மருமகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
மத்தியப்பிரதேச மாநிலம், பிலோ கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். 35 வயதாகும் இவர், தனது மாமியாருடன் வசித்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை, இவர் வேலை முடித்து நள்ளிரவில் வீடு திரும்பினார்.
அப்பொழுது 55 வயதாகும் அவரின் மாமியார், சுட்டு வைத்த சப்பாத்தியை தட்டில் வைத்துள்ளார். அதனை பார்த்து ஆத்திரமடைந்த சுரேஷ், சப்பாத்தி ஆறியதாகவும், தனக்கு சூடாக சப்பாத்தி சுட்டு தருமாறு மாமியாரிடம் கூறினார். ஆனால் ஏற்கனவே சுட்டு வைத்துள்ளதாகவும், புதிதாக சுட்டால் அது வீணாகிவிடும் என மாமியார் கூறி, சுட்டுத்தர மறுத்துள்ளார்.
இதனால் வெறியான அவர், அங்கு இருந்த தடியை எடுத்து மாமியாரின் மண்டையில் சரமாரியாக அடித்தார். இதனால் மண்டை பிளந்து, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே இறந்தார். இதுகுறித்து காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்க, சுரேஷை கைது செய்தனர். மேலும், மாமியாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…