கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலில் வைரஸ் எத்தனை நாட்கள் உயிருடன் இருக்கும்? மத்திய அரசு தகவல்!

Published by
Rebekal

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலில் வைரஸ் 9 நாட்கள் வரை உயிருடன் இருக்கும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைத்துவிட வேண்டும் அல்லது எரித்துவிட வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள பார்சி இனத்தவர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிப்பதோ, புதைப்பதோ இல்லையாம். அவர்கள் ஒரு கட்டிடத்தில் இறந்தவர்களின் உடலை அப்படியே வைத்து விடுவார்களாம்.

அதை பிணம் தின்னும் பறவைகள், விலங்குகள் சிதைக்குமாம். ஆனால் மத்திய அரசு கொரோனாவால் உயிரிழந்தவர்களை புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும் எனக் கூறி உள்ளதால், இது பார்சி இன மக்களின் மரபுக்கு எதிரானது என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் உடலில் கொரோனா வைரஸ் ஒன்பது நாட்கள் வரை உயிருடன் இருக்கும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக கூறியுள்ளனர்.

எனவே தான் இறந்தவர்களை புதைக்கவும், எரிக்கவும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இறந்தவர்களின் உடலிலிருந்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், பார்சி மக்களின் இறுதி சடங்குகளை கடைப்பிடிக்கும் வகையிலும் சமனான ஒரு வழியைக் கண்டறிந்து அதை மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளனர்.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago