ஹரியானா மாநிலம் ச்ஹாச்ராவுலி பகுதியில் இருக்கும் மாலிக்பூர் காதர் பகுதியைச் சேர்ந்தவர் குல்ஃபாம் இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. ஆனால், தனக்கு கிடைத்த மனைவி இப்படி ஒரு முடிவை எடுப்பார் என அவர் கனவிலும் கூட இப்படி நடக்கும் என்று நினைத்திருக்கமாட்டார். திருமணம் முடிந்து முதலிரவு அன்று அவரது மனைவி, தனது கணவரிடம் மனம் திறந்து பேசியுள்ளார். தான் திருமணத்திற்கு முன்பாக எனக்கு கணவராக வருபவர் பற்றி பல கனவுகள் இருப்பதாகவும், அதில் குறிப்பாக குல்ஃபாமின் தாடி, மீசை, ஆகியவை தனக்குப் பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், நான் படித்த நல்ல குடும்பத்தில் இருந்து வந்துள்ளதாகவும், இந்த வீட்டில் வசதிகள் எதுவும் இல்லை என்றும் மனைவி கூற, அதை கணவர் பொறுமையாக அனைத்தையும் கேட்டுள்ளார். பின்னர் தனது கனவுக்கு ஏற்ப கணவர் மாற வேண்டும் என்றும் மனைவி கோரிக்கை வைத்துள்ளார். மனைவியின் கோரிக்கையை பொறுமையாக கேட்டுக்கொண்ட குல்ஃபாம், உனக்கு பிடித்த மாதிரி தன்னை மாற்றிக்கொள்வதாக உறுதியளித்து மனைவியை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். ஆனால், இதன் பின்னரே திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அதாவது முதலிரவு முடிந்த பின்னர், குல்ஃபாம் மனைவியிடம், நான் தன்னுடைய விருப்பப்படியே இருப்பேன், எதையும் உனக்காக மாற்றிக்கொள்ளமாட்டேன் என்று கூறி தூங்கச் சென்றுள்ளார். பின்பு விடிந்ததும் எழுந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மனைவி அவரது அறையில் இல்லை. பின்னர் விசாரித்த போது மனைவி அவரின் பிறந்த வீட்டுக்கே சென்றுள்ளார், என தெரியவந்தது. இந்நிலையில் இதுகுறித்து குல்ஃபாமின் போலீஸில் புகார் அளித்துள்ளார், பின்னர் அவரது மனைவியின் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…