மனைவி ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்கவில்லை எனும் ஆத்திரத்தில் பஞ்சாபை சேர்ந்த கணவர் ஒருவர் தனது மனைவி மீது ஆசிட் வீசி கொல்ல முயற்சி செய்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா என்னும் மாவட்டத்தில் உள்ள விவசாயி ஒருவர் 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், நான்கு வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் அவர் தனக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை எனும் ஆசையில் தனக்கு இன்னும் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென விரும்பியுள்ளார். இதனையடுத்து தனது மனைவியிடமும் தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையை கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி மனக்கசப்பும் எழுந்துள்ளது.
இதனையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பாக மாலை நேரத்தில் அவர் மது அருந்திவிட்டு தனக்கு இருந்த விரக்தியில், ஆசிட் பாட்டில் ஒன்றை வாங்கி வந்துள்ளார். அதன்பின் அவரது மனைவி எதிராக வந்த பொழுது ஆசிட்டை எடுத்து அவரது மனைவியின் முகம் மற்றும் கழுத்தில் ஊற்றியுள்ளார். இந்த தாக்குதலில் அவரது மனைவிக்கு 60% உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்து வரும் அண்டை வீட்டுக்காரர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனைவி ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்கவில்லை என்ற காரணத்திற்காக ஆசிட் வீசிய நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அவரை தேடி வருகின்றனர்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…