HD Kumaraswamy [Image Source : ANI]
நான் ஒரு சிறிய கட்சி, எனது தேவை யாருக்கும் இல்லை என்று ஜேடி(எஸ்) தலைவர் ஹெச்.டி.குமாரசாமி கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த மே 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கர்நாடக தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக முன்னாள் முதல்வரும், ஜேடி(எஸ்) தலைவருமான ஹெச்.டி.குமாரசாமி ஆட்சி அமைப்பது குறித்து இதுவரை தன்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாக இன்னும் சில மணி நேரங்கள் உள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு தேசியக் கட்சிகளும் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கருத்துக் கணிப்புகள் ஜேடிஎஸ் 30-32 இடங்களில் வெற்றி பெரும் என்று தெரிவித்துள்ளது.
எனவே, நான் ஒரு சிறிய கட்சி, எனது தேவை யாருக்கும் இல்லை, நான் ஒரு நல்ல வளர்ச்சியை எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், கர்நாடகாவில் காங்கிரஸ் 115 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 73 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
மும்பை : ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை தனுஸ்ரீ தத்தா, திரைத்துறையில் பாலியல் அத்துமீறல் குறித்த ‘Me…