புகழ்பெற்ற எழுத்தாளர் பாபாசாகேப் புரந்தரே மறைவால் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவு வேதனைப்படுகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி குறித்த தனது படைப்புகள் மூலமாக மிகவும் புகழ்பெற்ற மகாராஷ்டிர மாநிலத்தின் வரலாற்று ஆசிரியரும், எழுத்தாளருமானவர் தான் பாபாசாகேப் புரந்தரே. 2019 ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 99 வயதுடைய எழுத்தாளர் புரந்தரே அவர்கள் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் இவரது மறைவுக்கு பிரதமர் மோடி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், நான் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு வேதனைப்படுகிறேன். பாபாசாகேப் புரந்தரே அவர்களின் மறைவு வரலாறு மற்றும் கலாச்சார உலகில் மிகப்பெரிய வெற்றிடத்தை விட்டு சென்று உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் வரும் தலைமுறையினருக்கு சத்ரபதி சிவாஜி மஹாராஜா உடன் மேலும் இணைந்திருப்பதற்கு வழிவகை செய்த புரந்தரேவுக்கு நன்றி. அவரது மற்ற படைப்புகளும் நினைவுகூரப்படும் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…