ராகுல் காந்தி இந்திய மக்கள் மீது போரை அறிவித்து உள்ளார். பிரதமருக்கு எதிரான தனது அரசியல் செயல்பாடு பலன் தராவிட்டால் நாடே பற்றி எரியும் என எச்சரிக்கிறார்.
தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற பேரணியில் காவல்துறையினருக்கும், போலீசாருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ராகுல் காந்தி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில், விவசாயிகள் போராட்டம் வேளாண் சட்டங்களை எதிர்த்து தான். அதுவும் டெல்லி மற்றும் அதை சுற்றி உள்ள எல்லைகள் மட்டும்தான். மத்திய அரசு இந்த சர்ச்சைக்குரிய சட்டங்களை இனியும் திரும்பப் பெறாவிட்டால், மற்ற மாநிலங்களுக்கும் இந்த போராட்டம் மற்றும் கலவரம் பரவும் என மத்திய அரசை எச்சரித்துள்ளார்.
ராகுல்காந்தியின் ட்வீட்டர் பதிவிற்கு பதிலடி கொடுத்த ஸ்மிருதி இரானி, ‘ராகுல் காந்தி இந்திய மக்கள் மீது போரை அறிவித்து உள்ளார். பிரதமருக்கு எதிரான தனது அரசியல் செயல்பாடு பலன் தராவிட்டால் நாடே பற்றி எரியும் என எச்சரிக்கிறார். நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் ராகுலின் வன்முறை அழைப்பை யாரும் கண்டு கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…