16 வயதினிலே படத்தில் ரஜினிக்கு பரட்டை என்ற பெயர் வந்தது. அடுத்த பரட்டை என்று பெயர் வாங்கியது நான்தான் போல, சுருட்டை முடி பறக்கிறது, அவ்வளவு பெரிய இதா?
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், சென்னையில் செய்தியாளர் சந்திப்பின்போது நகைச்சுவையாக பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ‘ஒரு முறைதான் விமானத்தில் சென்ற போது அருகில் இருந்த நபர் தன்னை மீம்ஸ் போடுபவர் என்று அறிமுகப்படுத்தினார். உடனே நான் கேட்டேன் என்ன பாத்தா எப்படி தெரியுது? எல்லாரும் என்னை மட்டும் மீம்ஸ் போடுறீங்க? யாரும் கருப்பா இல்லையா? குள்ளமா இல்லையா? யாரும் சுருட்ட முடி இல்லையா? என்று கேட்டேன்.
அதற்கு அந்த நபர் அக்கா உங்களை மீம்ஸ் போட்டால் தான் அதிக பார்வையாளர்கள் வருகிறது. எது வியாபாரம் ஆகிறது அது தானே அதிகம் பிடிக்கும். அதிக வியூஸ் வந்தால் வருமானம் வரும். இதனையடுத்து, விமானத்தில் இருந்து இறங்கும் போது அந்த நபர் அக்கா மன்னிச்சிடுங்க, இனி உங்களை மீம்ஸ் போட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்கு நான் எனக்கு அவமானம் வருகிறது என்றாலும், உங்களுக்கு வருமானம் வருகிறது என்றால் நீங்கள் தொடருங்கள். என்னால் யாருக்காவது உதவி வருகிறது, என் தன்மானத்தை குறித்து உங்களுக்கு வருமானம் வருகிறது என்றால் தொடருங்கள் என தன்னம்பிக்கை ஊட்டியதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், எப்போது பார்த்தாலும் மீம்ஸ்களில் பரட்டை பரட்டை என்று போடுகிறார்கள். 16 வயதினிலே படத்தில் ரஜினிக்கு பரட்டை என்ற பெயர் வந்தது. அடுத்த பரட்டை என்று பெயர் வாங்கியது நான்தான் போல, சுருட்டை முடி பறக்கிறது, அவ்வளவு பெரிய இதா? காலேஜ் படிக்கும்போது என்னுடைய உடைக்கே ரசிகர்கள் கூட்டம் உண்டு என்று நகைச்சுவையாக பேசியுள்ளார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…