அமெரிக்க அரசு மீண்டும் கூடுதலாக ரூ.22.5 கோடி இந்தியாவிற்கு நிதியுதவியை அறிவித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்பட்டு உள்ளது. இதுவரை, கொரோனாவால் 33050 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், பலியானோர் எண்ணிக்கை 1,074 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு இந்தியாவுக்கு அமெரிக்க அரசு கடந்த 6-ம் தேதி (2.9 மில்லியன் டாலர்)இந்திய மதிப்பில் ரூ.21.75 கோடி நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தது. இந்நிலையில், அமெரிக்க அரசு மீண்டும் கூடுதலாக ரூ.22.5 கோடி இந்தியாவிற்கு நிதியுதவியை அறிவித்துள்ளது. இதனால் , அமெரிக்கா மூலம் ரூ.44.25 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் கூறுகையில், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வரும் இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கும். மேலும், அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு என அவர் கூறியுள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…