அமெரிக்க அரசு மீண்டும் கூடுதலாக ரூ.22.5 கோடி இந்தியாவிற்கு நிதியுதவியை அறிவித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்பட்டு உள்ளது. இதுவரை, கொரோனாவால் 33050 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், பலியானோர் எண்ணிக்கை 1,074 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு இந்தியாவுக்கு அமெரிக்க அரசு கடந்த 6-ம் தேதி (2.9 மில்லியன் டாலர்)இந்திய மதிப்பில் ரூ.21.75 கோடி நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தது. இந்நிலையில், அமெரிக்க அரசு மீண்டும் கூடுதலாக ரூ.22.5 கோடி இந்தியாவிற்கு நிதியுதவியை அறிவித்துள்ளது. இதனால் , அமெரிக்கா மூலம் ரூ.44.25 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் கூறுகையில், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வரும் இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கும். மேலும், அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு என அவர் கூறியுள்ளார்.
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…