தடுப்பூசி போடவில்லையெனில்,சம்பளம் இல்லை….!

Published by
Edison

சத்தீஸ்கரில் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி ஒருவர் தனது ஊழியர்களிடம் தடுப்பூசி போடவில்லையெனில்,சம்பளம் நிறுத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமடைந்துள்ளதால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால்,கொரோனா பரவலைத் தடுக்க அந்தந்த மாநிலங்களில் தளர்வுகளுடன் மற்றும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும்,கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.அதன் முதற்கட்டமாக,முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.பின்னர்,மே 1 ஆம் தேதியிலிருந்து 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,சத்தீஸ்கர் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் மற்றும் அரசு அதிகாரிகளில் சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்வர மறுக்கின்றனர்.இதனால்,அம்மாநில பழங்குடி நலத்துறை அதிகாரி கே.எஸ் மஸ்ராம் என்பவர்,தனது ஊழியர்களிடம் கொரோனா தடுப்பூசி போடுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்,அவ்வாறு தடுப்பூசி போடத் தவறினால் அடுத்த மாதத்திற்கான அவர்களின் சம்பளம் நிறுத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும்,இதுகுறித்து மஸ்ராம் கூறுகையில்,”எனது நோக்கம் எனது அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதுதான்.அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை”,என்று அவர் கூறினார்.

இதனையடுத்து,உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் இதுவரை ஊழியர்களில் 95 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

3 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

4 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

4 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

5 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

6 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

6 hours ago