குஜராத்தில்,3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில்,கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில்,குஜராத்தில்,3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஹரதாஸ்பாய் கரிங்கியா என்பவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தற்போது எஸ்எம்எஸ் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது,குஜராத்தில் உப்லெட்டாவில் வசிக்கும் ஹரதாஸ்பாய் கரிங்கியா என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டில் காலமானார்.பின்னர்,அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது இறப்புச் சான்றிதழை சம்பந்தப்பட்ட துறையிலிருந்து பெற்றனர்.இந்த நிலையில்,ஹரதாஸ்பாய் கரிங்கியா இறந்து மூன்று ஆண்டுகள் கழித்து,அவர் தனது முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை மே 3 ஆம் தேதியன்று போட்டுக்கொண்டதாக அவரின் குடும்பத்தினரின் மொபைல் போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது.
இதுகுறித்து அவரது மருமகன் அரவிந்த் கரிங்கியா கூறுகையில்,”இது எப்படி சாத்தியம் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை”,என்று அதிர்ச்சியுடன் கூறினார்.
இதற்கு முன்னதாக,இதேபோன்ற வழக்கு தஹோடில் பதிவாகியுள்ளது, அதாவது,நரேஷ் தேசாய் என்பவர் சமீபத்தில் கோவின் நிறுவனத்திடமிருந்து எஸ்எம்எஸ் ஒன்றைப் பெற்றார்,அதில் அவரது தந்தை நட்வர்லால் தேசாய்க்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நட்வர்லால் தேசாய் 2011 ஆம் ஆண்டிலேயே இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம்,நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் கொரோனா தடுப்பூசிகளின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில் இதுபோன்ற உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…