மனதை தொட்ட சம்பவம்..!கொரோனா தடுப்பூசி பணிக்காக 2 லட்சம் நன்கொடை வழங்கிய பீடி தொழிலாளி…!

Published by
Edison

கேராளாவில்,ஊனமுற்ற பீடி தொழிலாளி ஒருவர் கொரோனா தடுப்பூசி பணிக்காக 2 லட்சம் நன்கொடை வழங்கிய நிலையில்,அதனைப் பாராட்டி பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

ஒரு நல்ல காரணத்திற்காகவே இருந்தாலும் பணத்தை நன்கொடையாக கொடுக்க பெரும்பாலான மக்கள் நினைப்பதில்லை.ஆனால் ஒரு சிலர் மட்டுமே தங்களது சேமிப்புகளை பாதிக்கப்பட்டவர்களுக்கோ அல்லது தொண்டு நிறுவனங்களுக்கோ கொடுக்க தயாராக இருப்பார்கள்.அந்த வகையில்,கேரள மாநிலம்,கண்ணூரைச் சேர்ந்த ஊனமுற்ற பீடி தொழிலாளி ஒருவர்,தான் மொத்தமாக சேமித்த ரூ.2,00,850லிருந்து ரூ.2 லட்சத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கிய சம்பவம் பலரது மனதையும் தொட்டுள்ளது.

ஏனெனில்,வங்கி ஊழியர்கள் முதலில் ரூ.1 லட்சம் அனுப்புமாறும் மீதமுள்ளவற்றை பின்னர் அனுப்புமாறு பீடி தொழிலாளியிடம் பரிந்துரைத்தபோது,அவர் பிடிவாதமாக இரண்டு லட்சத்தையும் ஒரே நேரத்தில் அனுப்ப விரும்பினார்.மேலும்,தனது முடிவு உறுதியானது என்றும்,இது முதல்வரின் பொது வேண்டுகோள் என்றும் கூறினார்.அதுமட்டுமல்லாமல் தனது பெயரை வெளியிடக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

இதனைக் கேள்விப்பட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன்,பீடி தொழிலாளிக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,”சி.எம்.டி.ஆர்.எஃப்-கணக்கிற்கு நன்கொடைகள் கொடுப்பது பற்றி இதயத்தை நெகிழ செய்யும் பல கதைகள் வந்து கொண்டிருக்கின்றன.இதில் பீடி தொழில் செய்யும் முதியவர் ஒருவர் தனது சேமிப்பு வங்கிக் கணக்கில் உள்ள ரூ.200,850 லிருந்து ரூ.2 லட்சத்தை நன்கொடை அளித்தார்.மேலும்,அந்த முதியவர் தனது பணம் சக மனிதர்களின் வாழ்க்கையை விட பெரிதாக இல்லை என்றும் கூறியுள்ளார்.ஒருவருக்கொருவரின் இந்த அன்புதான் நம்மை ஒன்றாக சேர்க்கிறது.மீண்டும்,உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி”,என்று கூறியுள்ளார்.

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

8 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

8 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

10 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

11 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

11 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

11 hours ago