Screenshots from Twitter Video [Image source : Twitter/@Benarasiyaa]
உத்திர பிரதேசத்தில் அமேதி மாவட்டத்தில் காவல்துறையினர் முன்னிலையிலேயே பாஜக வேட்பாளரின் கணவரை சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ தாக்கியுள்ளார்.
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதற்கட்ட வாக்குப்பதிவு மே 4ஆம் தேதி 37 மாநகராட்சிகளுக்கு நடைபெற்று முடிந்த நிலையில், நாளை (மே 11) 2ஆம் கட்டமாக 760 கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், அம்மாநிலத்தில் அமேதி மாவட்டத்தில் உள்ள பாஜக மாநகராட்சி தேர்தல் வேட்பாளர் ரஷ்மி சிங்கின் கணவர் தீபக் சிங்கை சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் சிங் இன்று (புதன்கிழமை) சரமாரியாக தாக்கினார் இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவமானது, அமேதி மாவட்டத்தில் உள்ள கௌரிகஞ்ச் கோட்வாலி காவல் நிலையத்திற்குள் நடந்துள்ளது அதிர்ச்சிக்குரிய விஷயமாகும்.
அந்த வீடியோவில் எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் சிங் மற்றும் அவரது உதவியாளர்களை போலீசார் சமாதானப்படுத்த முயற்சிக்கும்போது, திடீரென சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் பாஜக வேட்பாளரின் கணவரை போலீசார் முன்னிலையிலேயே அடித்தார்.
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவரும், நடிகை வனிதாவின் மகளுமான ஜோவிகா விஜயகுமார் நடிகையாகவும், தயாரிப்பாளாகவும் களமிறங்கியுள்ளார்.…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பல வீரர்கள் இதுவரை சிறப்பாக விளையாடி நாம் பார்த்திருந்தோம்.…
சென்னை : இன்று (27-05-2025) ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மெதுவாக…
சென்னை : தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி பதவிகளுக்கு வருகின்ற ஜூன் மாதம் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில்…
சென்னை : வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து…
சென்னை : கடந்த 24ம் தேதி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு…