புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா..! ஆம் ஆத்மி, டிஎம்சியைத் தொடர்ந்து ஆர்ஜேடி புறக்கணிப்பு..!

Published by
செந்தில்குமார்

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை ராஷ்ட்ரிய ஜனதா தளமும் (ஆர்ஜேடி) புறக்கணிக்க முடிவு.

பழைய நாடாளுமன்ற கட்டிடம் இன்றைய தேவைக்கு போதுமானதாக இல்லை என்ற காரணத்தினால் கடந்த 2020 ஆம் ஆண்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 64,500 சதுர அடியில், ரூபாய் 970 கோடி செலவில், இந்த கட்டிடம் தற்பொழுது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் மே மாதம் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்க்கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை, பிரதமர் அல்ல, ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு மத்தியில், பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி), ஆம் ஆத்மி கட்சி மற்றும் சிபிஐக்கு பிறகு, இப்போது ராஷ்ட்ரிய ஜனதா தளமும் மே 28 அன்று டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.

முன்னதாக, டெல்லியில் நிர்வாக சேவைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுடன் கடும் மோதலில் ஈடுபட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

சாத்தான்குளம் வழக்கில் புதிய திருப்பம்! ஸ்ரீதர் அப்ரூவராக மாற எதிர்ப்பு!

மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…

5 minutes ago

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…

9 hours ago

கேரள கன்னியாஸ்திரிகள் மீது ஆள்கடத்தல், கட்டாய மதமாற்ற வழக்குப்பதிவு – மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…

10 hours ago

நாய்-க்கு இருப்பிடச் சான்றிதழ்.., வினோத சம்பவத்தால் பீகாரில் எழுந்தது சர்ச்சை.!

பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…

11 hours ago

நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலையில் கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு.!

நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…

11 hours ago

“சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்” – கண்ணீர் மல்க சூளுரைத்த ராஜேந்திர பாலாஜி.!

சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…

12 hours ago