புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா..! ஆம் ஆத்மி, டிஎம்சியைத் தொடர்ந்து ஆர்ஜேடி புறக்கணிப்பு..!

Published by
செந்தில்குமார்

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை ராஷ்ட்ரிய ஜனதா தளமும் (ஆர்ஜேடி) புறக்கணிக்க முடிவு.

பழைய நாடாளுமன்ற கட்டிடம் இன்றைய தேவைக்கு போதுமானதாக இல்லை என்ற காரணத்தினால் கடந்த 2020 ஆம் ஆண்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 64,500 சதுர அடியில், ரூபாய் 970 கோடி செலவில், இந்த கட்டிடம் தற்பொழுது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் மே மாதம் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்க்கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை, பிரதமர் அல்ல, ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு மத்தியில், பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி), ஆம் ஆத்மி கட்சி மற்றும் சிபிஐக்கு பிறகு, இப்போது ராஷ்ட்ரிய ஜனதா தளமும் மே 28 அன்று டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.

முன்னதாக, டெல்லியில் நிர்வாக சேவைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுடன் கடும் மோதலில் ஈடுபட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

7 minutes ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

21 minutes ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

58 minutes ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

1 hour ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

3 hours ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

3 hours ago