இடைவிடாமல் பெய்த மழையால் மும்பையின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம்.!

Published by
Ragi

மும்பையில் பெய்து வரும் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மும்பையில் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. கடந்த 12 மணி நேரத்தில் 21 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் மும்பை மாநகரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அது மட்டுமின்றி சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. எனவே தேசிய பேரிடர் மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். தொடர் கனமழையால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளம் சூழந்ததால் நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து மருத்துவமனையில் உள்ள வெள்ளத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதே போன்று பைகுலா என்ற பகுதியில் மழை வெள்ளத்தில் 300 பணியாளர்களை ஏற்றி சென்ற ரயில் சிக்கி கொண்டதை அடுத்து, அவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

இதற்கிடையே மக்களை வெளியே செல்ல கூடாது என்றும், வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படியும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏனெனில் மும்பை நகரில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசி வருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து மும்பை முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்த மோடி அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பாக அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

Recent Posts

“இது ஒன்றும் போட்டியல்ல.., இந்த ஒப்பீடு தேவையற்றது” – மனம் திறந்த பாடகி சின்மயி.!

“இது ஒன்றும் போட்டியல்ல.., இந்த ஒப்பீடு தேவையற்றது” – மனம் திறந்த பாடகி சின்மயி.!

சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…

32 minutes ago

பஞ்சாப் vs மும்பை: பைனலுக்கு போக போவது யார்? டாஸ், பிளேயிங் லெவன் இதோ.!

அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

54 minutes ago

“மக்கள் ஆதரவுடன் திமுக கூட்டணி வெற்றி பெறும்” – விசிக தலைவர் திருமாவளவன்.!

புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…

1 hour ago

“தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால்” இதான் நடக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…

2 hours ago

ஆதவ் அர்ஜுனா விவகாரம்: ”விஜய் என்னுடன் தொலைபேசியில் பேசவில்லை” – எடப்பாடி பழனிசாமி.!

சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…

3 hours ago

அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் – தவெக தலைவர் விஜய் மரியாதை!

சென்னை : அஞ்சலை அம்மாள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கியமான வீராங்கனையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர். தமிழக…

4 hours ago