Categories: இந்தியா

காங்கிரேஸிடம் ரூ.1,700 கோடி கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்..!

Published by
பாலா கலியமூர்த்தி

Congress: காங்கிரஸ் கட்சியிடம் ரூ.1,700 கோடி கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சமீபத்தில் கடந்த 2018-19ம் நிதியாண்டில் வருமான வரிக் கணக்கை தாமதமாக தாக்கல் செய்ததற்காக காங்கிரஸ் கட்சிக்கு ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், காங்கிரஸ் கட்சியின் 4 வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டங்களை தெரிவித்தனர். அதேசமயம் வங்கி கணக்குகள் முடக்கம் தொடர்பாக காங்கிரஸ் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியிடம் ரூ.1,700 கோடி கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2017-18, 2020-21 காலகட்டத்திற்கான வரி அபராத தொகையை செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வருமான வரித்துறை கூறியதாவது, 2017-18 முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி முறையாக தாக்கல் வருமான வரிக் கணக்கை செய்யவில்லை.

இந்த ரூ.1,700 கோடியில் வட்டியுடன் வருமான வரி மற்றும் அபராதம் அடங்கும் எனவும் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் சமயத்தில் வருமான வரித்துறையின் நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், வருமான வரித்துறை நோட்டீஸை எதிர்த்து காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக கூறப்படுகிறது.

Recent Posts

காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை! உதவி எண்கள் இதோ…

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…

20 minutes ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் இரு நாட்டு…

2 hours ago

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

4 hours ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

5 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

12 hours ago