Categories: இந்தியா

போலி 500 ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி தகவல்!

Published by
பாலா கலியமூர்த்தி

ரூ.4.55 கோடி மதிப்பிலான 91,110 ரூபாய் 500 நோட்டுகளை கண்டறிந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தகவல்.

2022-23 ஆம் ஆண்டில் இந்தியாவில் போலி 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 14.4% அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரிசர்வ் வங்கி மற்றும் மற்ற வங்கிகள் ரூ.3.98 கோடி மதிப்பிலான 79,669 கள்ள நோட்டுகளில் இருந்து, ரூ.4.55 கோடி மதிப்பிலான 91,110 ரூபாய் 500 நோட்டுகளை கண்டறிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2022-23 ஆம் ஆண்டில், வங்கித் துறையில் கண்டறியப்பட்ட மொத்த போலி இந்திய ரூபாய் நோட்டுகளில் (எஃப்ஐசிஎன்) 4.6 சதவீதம் ரிசர்வ் வங்கியிலும், 95.4 சதவீதம் மற்ற வங்கிகளிலும் கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ரூ.20 மற்றும் ரூ.500 (புதிய வடிவமைப்பு) மதிப்பில் கண்டுபிடிக்கப்பட்ட போலி நோட்டுகளில் முறையே 8.4 சதவீதம் மற்றும் 14.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுபோன்று, ரூ.10, ரூ.100 மற்றும் ரூ.2000 மதிப்பிலான போலி நோட்டுகள் முறையே 11.6 சதவீதம், 14.7 சதவீதம் மற்றும் 27.9 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கிடையில், 2021-22ல் நிதியாண்டின் முறையே 9.9% மற்றும் 5 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, 2022-23-ல் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு மற்றும் அளவு முறையே 7.8 சதவீதம் மற்றும் 4.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மதிப்பு அடிப்படையில், ரூ.500 மற்றும் ரூ.2000 வங்கி நோட்டுகளின் பங்கு, மார்ச் 31, 2022-இல் இருந்த 87.1 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, 2023 மார்ச் 31 அன்று புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் 87.9 சதவீதமாக இருந்துள்ளது. அளவு அடிப்படையில், ரூ.500 மதிப்பிலான மதிப்பு 37.9 சதவீதமாக இருந்தது, அதைத் தொடர்ந்து ரூ.10 ரூபாய் நோட்டுகள் மார்ச் 31, 2023 அன்று புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளில் 19.2% ஆக இருந்தன என்றுள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

16 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

16 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

17 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

17 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

18 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

19 hours ago