மராட்டியத்தில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி!

Published by
பாலா கலியமூர்த்தி

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில், பாஜகவும், இந்தியா கூட்டணி கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக, பாஜகவை வீழ்த்த ஒற்றைக் குறிக்கோளோடு, வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட 26 கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணி, பல்வேறு  ஆலோசனைகளை மேற்கொண்டு, வியூகங்களை வகுத்து வருகிறது.

இருப்பினும், நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், தற்போது வரை பிரதமர் வேட்பாளரையோ, தொகுதிப் பங்கீட்டையோ இறுதி செய்யாமல் இந்தியா’ கூட்டணி கட்சிகள் உள்ளது. இந்த சூழலில்,  டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பொங்கல் பரிசு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்..!

அப்போது, பிரதமர் வேட்பாளர் யார் என்று குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தலாம் என்றும் முன்மொழியப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், பிரதமர் வேட்பாளர் குறித்து பின்னர் பார்க்கலாம் என தெரிவித்த கார்கே, தற்போது தொகுதி பங்கீடு தான் முதன்மையானது, தொகுதிப் பங்கீட்டை ஜனவரி மாதத்துக்குள் முடிவுசெய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த நிலையில், மராட்டியத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்தன என தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ், உத்தவ் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, மராட்டியத்தில் 40 தொகுதிகளில் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா தலா 18 முதல் 20 தொகுதிகளில் போட்டியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சி 8 முதல் 10 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

Recent Posts

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…

23 minutes ago

INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…

1 hour ago

மன்னிப்பு கேட்க சொல்லியும் கேட்கல…பாமகவில் இருந்து அருளை நீக்கிய அன்புமணி!

சென்னை :  சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…

2 hours ago

முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…

2 hours ago

திருப்புவனம் இளைஞர் மரண விவகாரம்: அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவு!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

3 hours ago

திருப்புவனம் : உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி!

சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…

4 hours ago