INDIA Alliance Party meeting [Image source : ANI]
அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த சுமார் 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள கூட்டணி தான் இந்தியா கூட்டணி. இந்த இந்தியா கூட்டணியின் சின்னம் ஆக.31ம் தேதி அறிவிக்கப்படும் என்று சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மும்பையில் கூடும்போது கூட்டணியின் சின்னம் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒருங்கிணைப்பில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து “இந்தியா” என்ற கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தை பீகார் மாநிலம் பாட்னாவில் நடத்தினார் நிதிஷ்குமார். இதன்பின்னர் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 2-வது கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு “இந்தியா” கூட்டணி என பெயரிடப்பட்டது.
இதனைதொடர்ந்து, “இந்தியா” கூட்டணியின் 3-வது கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற உள்ளது. வரும் 31 மற்றும் செப்டமப்ர் 1-ம் தேதி நடைபெறும் மும்பை இரண்டு நாள் கூட்டத்தில் “இந்தியா” கூட்டணி கட்சிகள் முக்கிய முடிவுகளை அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த சமயத்தில் இந்தியா கூட்டணியின் சின்னம் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…