Categories: இந்தியா

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 75,000 டன் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதி.!

Published by
செந்தில்குமார்

கடந்த ஜூலை 20ம் தேதி முதல் உள்நாட்டுச் சந்தையில் விலை உயர்வைக் கட்டுக்குள் வைக்கவும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது.  இந்த அறிவிப்பானை வெளியாவதற்கு முன்பு ஏற்றுமதிக்காக, கப்பல்களில் ஏற்றப்பட்ட சரக்குகளுக்கு தடை பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, பாசுமதி அல்லாத வேகவைத்த அரிசி மற்றும் பாசுமதி அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதி கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று உணவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது. தொடர்ந்து, பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்க இந்தியாவை ஊக்குவிப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) கூறியது.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 75,000 டன்களுக்கு பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான ஏற்றுமதிகள் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் மூலம் அனுமதிக்கப்படுகிறது என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஏற்றுமதிக் கொள்கையில் திருத்தம் செய்யும்போது, ​​மற்ற நாடுகளுக்கு உணவுப் பாதுகாப்பைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் வழங்கும் அனுமதியின் அடிப்படையில் ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என்றும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அரசு, உடைந்த அரிசியை ஏற்றுமதி செய்வதைத் தடைசெய்தது. நெல் பயிரின் கீழ் பரப்பளவு வீழ்ச்சியடைந்ததால் உற்பத்தி குறைவாக இருக்கும் என்ற கவலையின் மத்தியில், பாசுமதி அல்லாத அரிசியின் ஏற்றுமதிக்கு 20 சதவீத வரி விதித்தது. இதன்பிறகு, நவம்பர் மாதம் இந்த தடையை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!

ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…

10 hours ago

மகாராஷ்டிரா தேர்தல்: ”வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியீடுக” – ராகுல் காந்தி வலியுறுத்தல்.!

மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…

11 hours ago

டெஸ்லா காரை விற்க போகும் டிரம்ப்.? வெள்ளை மாளிகையில் நிறுத்தப்பட்ட சிகப்பு கார்.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…

12 hours ago

“நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!

சென்னை :  கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…

12 hours ago

நகைக்கடன் விதிகளில் மாற்றம்! புதிய விதிமுறைகள் என்னென்ன? விவரித்த எம்.பி. சு.வெங்கடேசன்.!

சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…

12 hours ago

”கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…

13 hours ago