இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 25 சதவீதம் இந்த 10 மாவட்டங்களில் பதிவாகியுள்ளது என சுகாதாரத்துறை வெளியீடு.இதில் பெங்களூரு முதல் இடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2 வது அலை கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது,மேலும் வைரஸ் தொற்று எண்ணிக்கையை குறைக்க நாடுமுழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவிலேயே தொற்று அதிகம் உள்ள 10 மாவட்டங்களின் பட்டியலை சுகாதார அமைச்சகம் இன்று இணையத்தில் வெளியிட்டுள்ளது.
அதன்படி பட்டியலில் உள்ள மாவட்டங்கள் பெங்களூரு, புனே, டெல்லி, அகமதாபாத், எர்ணாகுளம், நாக்பூர், மும்பை, கோழிக்கோடு, ஜெய்ப்பூர் மற்றும் தானே, ஆகிய மாவட்டங்களாகும், மேலும் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 25 சதவீதம் இந்த 10 மாவட்டங்களில் பதிவாகியுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதில் தற்போது பெங்களூர் மாவட்டம் தான் முதல் இடத்தில் உள்ளது எனவும் தெவித்துள்ளது, மேலும் நேற்று மட்டும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 414,188 பேராக பதிவாகியுள்ளனர், மேலும் 3,915 பேர் உயிரிழந்துள்ளனர், இதுவரையிலும் உயிரிழப்பு எண்ணிக்கை, 234,083 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை : குணச்சித்திர நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னையில் நெற்றிரவு காலமானார். இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்…
சென்னை : போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் எனக் கூறப்படும்…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…