கொரோனா அச்சறுத்தல் மத்தியில் பெட்ரோல், டீசல் மீது அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா முதலிடத்தில் வந்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வருகிறது. இதனிடையே பெட்ரோல், டீசலுக்கு அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா மாறியுள்ளது. தற்போது பெட்ரோல், டீசல் 69 சதவிகிதம் அளவுக்கு வரி விதிக்கப்படுகிறது. மத்திய அரசு கடந்த திங்கள்கிழமை அன்று பெட்ரோல் மீதான வரியை ரூ.10, டீசல் மீதான வரி ரூ.13 என உயர்ந்துள்ளது. இதன் மூலம் பெட்ரோல், டீசல் மீது அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா முதலிடத்துக்கு வந்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 64%, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி 63%, இங்கிலாந்தில் 62% பெட்ரோல், டீசல் மீது வரிவிதிப்பாக உள்ளது.
இதையடுத்து ஸ்பெயினில் 53%, ஜப்பானில் 47%, கனடாவில் 33%, அமெரிக்காவில் 19% வரிவிதிப்பு உள்ளது. இந்த வரிவிதிப்பு மூலம் அரசுக்கு நடப்பு நிதியாண்டில் ஏப்ரலை தவிர்த்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மார்ச் மாதம் ஏற்றப்பட்ட வரி உயர்வால் அரசுக்கு ரூ.39 ஆயிரம் கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் மத்திய அரசுக்கு ரூ.2 லட்ச கோடிக்கும் அதிகமாக வருவாய் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…