Dornier Do-228 [Image source : X/@IAF]
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தயாரித்த ஆறு புதிய டோர்னியர் டூ-228 விமானங்களில் முதல் விமானத்தை இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 10ம் தேதி டோர்னியர் டூ-228 விமானங்களை கொள்முதல் செய்ய இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) உடன் ஒப்பந்தம் செய்தது.
இந்த ஒப்பந்தம் ஆனது 667 கோடி ரூபாய் மதிப்பில் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆறு டோர்னியர் டூ-228 விமானங்களை இந்திய விமானப்படைக்கு வழங்க வேண்டும். அந்த வகையில், இன்று முதலாவது டோர்னியர் டூ-228 விமானத்தை இந்திய விமானப்படைக்கு வழங்கியுள்ளது.
இந்த டோர்னியர்-228 ரக விமானமானது 19 இருக்கைகள் கொண்ட பல்நோக்கு இலகுரக போக்குவரத்து விமானமாகும். இதில் ஒவ்வொரு புதிய விமானமும் மேம்படுத்தப்பட்ட என்ஜின்கள், ஐந்து பிளேட் கலப்பு ப்ரொப்பல்லர்கள், பல மின்னணு உபகரணங்களை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட ஏவியோனிக்ஸ் மற்றும் கண்ணாடி காக்பிட் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
இந்த விமானங்கள் போக்குவரத்து, விமானப்படை பயிற்சி, கடலோர காவல் பணி, கடல்சார் கண்காணிப்பு, தேடல் மற்றும் மீட்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. புதிய டோர்னியர் டூ-228 விமானத்தின் அறிமுகம் இந்த பணிகளில் இந்திய விமானப்படையின் திறன்களை அதிகரிக்கும். இது இந்தியாவின் வான்வெளியைப் பாதுகாக்க இந்திய விமானப்படைக்கு உதவும்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…