எல்லையில் படைகளை குவித்து வரும் சீனா… இந்தியாவும் படைகளை குவித்து பதிலடிக்கு தயாராகும் இந்தியா….

Published by
Kaliraj

சீன எல்லைக்குள் நுழைந்து சீன வீரர்களின் ரோந்து பணிகளை  இந்திய வீரர்கள் தடுப்பதாக சீனா மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.

நம் அண்டை நாடான சீன நமக்கு மிகவும் குடைச்சல் கொடுத்துவரும் நாடு. இந்த நாட்டை குடியரசாக உலகில் முதன்முதலில் அங்கிகரித்த நாடு இந்தியா. ஆனால் அந்த நன்றியை மறந்த சீன இந்தியாவுடன் நட்பாக இருப்பதாக காட்டிக்கொண்டு 1962 இல் முதுகில் குத்தியதை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இன்றளவும் லடாக் யூனியன் பிரதேசத்தின் அகாசின் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களுக்கான ஒரே தொடர்பு மற்றும் போக்குவரத்து சிக்கிம் மாநிலத்தின்  கீழ் பகுதியிலிருக்கும் டார்ஜிலிங் வழியாகத்தான். இந்த இடத்தை துண்டித்தால் வடகிழக்கு மாநிலங்களுடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படும். இதற்காகவே  சீனா  டோகாலாம் பிரச்சனையை ஏற்கனவே ஏற்படுத்தியது.
அதன் பிறகு தற்போது நடக்கும் பிரச்சனை மேலும்  தீவிரமாகி வருகிறது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி சிக்கிம் பகுதியில் இந்திய வீரர்கள் எல்லைத் தாண்டி சீன எல்லைக்குள் வந்ததாக குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியா உடனடியாக தனது வீரர்களை திரும்ப பெற வேண்டும் என சீனா கூறியுள்ளது.இதற்கு இந்திய தரப்பில்  பதில் ஏதும் அளிக்கவில்லை. தற்போது மோதல் நீடித்து வரும் நான்கு முக்கிய இடங்களுள் சிக்கிமில் உள்ள நாகு லா என்ற இடமும் ஒன்று.இது தவிர பாங்கொங் ஏரி, கல்வான் ஆற்றுப்பகுதி மற்றும் லங்மார்போ ஆகிய பகுதிளிலும் மோதல் நீடித்து வருகிறது. இந்த பகுதிகளில் இரு நாட்டு இராணுவங்களும் அதிக படைகளை குவித்து வருகிறது. ஏற்கனவே மே 5ம் தேதி பாங்கோங் ஏரியிலும், மே 9ல் நாகுலா பகுதியிலும் மோதல் ஏற்பட்டது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா கட்டுமானம் ஏற்படுத்தி வருவதாக சீனா கூறி வருகிறது. முன்னதாக சீனாவின் மாவோ இந்தியா மீது போர் தொடுத்த போது அதற்கு இங்கிருந்து ஆதரவு அளித்த ஒரு கட்சி இரண்டாக பிளந்ததை அனைவரும் அறிவார். எனவே  இந்தியா-சீனா விவகாரத்தில் இந்தியர்களாக  இந்திய உணர்வுடன் இந்த விவகாரத்தை அனுகவேண்டும் என்பதே இந்திய உணர்வுள்ள அனைவரது கோரிக்கையாகும்.

Published by
Kaliraj

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

6 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

7 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

9 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

9 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

10 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

11 hours ago