சீன எல்லையை கண்காணிக்க.. பாரத் ட்ரோன்களை இறங்கிய இந்திய இராணுவம்.

Published by
murugan

கடந்த மாதம் 15-ஆம் தேதி இந்திய, சீன  இரு நாட்டு வீரர்களுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிழந்தனர்.  சீனா தரப்பில் 35 வீரர்களும் உயிரிழந்தனர் என கூறப்படுகிறது. இதனால், எல்லையில் இரு நாடும் படைகளை குவித்தனர்.

இதைத்தொடர்ந்து, கிழக்கு லடாக்கில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து இந்திய, சீன படைகள் வெளியேற தொடங்கின. இந்நிலையில், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே நடந்து வரும் எல்லை தகராறுக்கு மத்தியில், கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் உயரமான பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் துல்லியமான கண்காணிப்பை மேற்கொள்வதற்காக சண்டிகரை அடிப்படையாக கொண்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) தனது உள்நாட்டில் உருவாக்கிய பாரத் என்ற ட்ரோனை இந்திய ராணுவத்திற்கு வழங்கியுள்ளது.

கிழக்கு லடாக் பகுதியில் நடந்து வரும் தகராறில் துல்லியமான கண்காணிப்புக்கு இந்திய ராணுவத்திற்கு ட்ரோன்கள் தேவை. இந்தத் தேவைக்காக, டிஆர்டிஓ அதற்கு பாரத் ட்ரோன்களை வழங்கியுள்ளது.  ரேடாரால் மூலம் கண்டுபிடிக்க முடியாத வகையில் ட்ரோன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக குளிர் மற்றும் கடும் வெப்பம் ஆகியவற்றிலும் செயல்படும் திறன் கொண்டது. அடர்ந்த வனத்தில் ஒளிந்துள்ள மனிதர்களை கண்டறிய கூடியது.

அந்நிய நாட்டு படைகளின் ஊடுருவல்கள் , அவர்களது நடவடிக்கைகளை கண்காணிக்க ஏற்ற வகையில் டிரோன்கள் செயல்படும்.

Published by
murugan

Recent Posts

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

38 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

1 hour ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

2 hours ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

2 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

18 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

19 hours ago