இந்திய ராணுவம் பூடான் நாட்டு ராணுவ வீரர்களுடன் இணைந்து கூட்டாக ராணுவ பயிற்சியில் ஈடுபட்டது. இந்த பயிற்சி பூடான் நாட்டில் நடைபெற்றது. இதற்காக இந்திய விமானப்படை வீரர்கள் ராணுவ ஹெலிகாப்டருடன் பூடான் நாட்டில் பயிற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது இந்திய ராணுவ ஹெலிகாப்டரில் இந்திய விமான வீரரும், பூடான் நாட்டு ராணுவ வீரரும் பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் இந்திய ராணுவ வீரர் பயிற்சியளிக்க, பூடான் நாட்டு ராணுவவீரர் பயின்று கொண்டிருந்தார்.
வானில் இந்த பயிற்சி நடைபெற்று கொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக எதிர்பாராத விதமாக ராணுவ ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்திய ராணுவ வீரரும், பூடான் நாட்டு ராணுவ வீரரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும், தரையிறங்குகையில் இருந்த மோசமான வானிலை காரணமாகவும், மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் இறங்கும் இடம் தெரியாமல் மலையில் மோதி விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…