[Image source : PTI]
ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து டிக்கெட் ரத்து அதிகரிக்கப்படுவதாக காங்கிரஸ் கூறுவது தவறானது என இந்தியன் ரயில்வே பதில் கூறியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியின் நடந்த ரயில் விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ அதிகாரிகள் தங்கள் விசாரணையை துவங்கி உள்ளனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சியினர் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி அண்மையில், ரயில் விபத்து தொடர்பாக மக்கள் ரயிலில் பயணிக்க பயப்படுகிறார்கள். கடந்த காலங்களில் இதுபோன்ற ரயில் விபத்து நடந்ததில்லை. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அனைவரையும் வேதனைக்கு உட்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்கு பிறகு ஆயிரக்கணக்கானோர் தங்களது டிக்கெட்டுகளை ரத்து செய்துள்ளனர் என குறிப்பிட்டு தங்கள் டிவிட்டர் பக்கத்தில் ஒரு விடியோவை காங்கிரஸ் தலைமை பதிவிட்டு இருந்தது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்தியன் ரயில்வேயின் டிவிட்டர் பக்கத்தில் இருந்து, காங்கிரஸ் கூறும் செய்தி தவறானது. டிக்கெட் ரத்து அதிகரிக்கவில்லை. மாறாக கடந்த 1ஆம் தேதி டிக்கெட் ரத்தானது இந்தியன் ரயில்வேயில் 7.7 லட்சமாக இருந்தது. கடந்த 3ஆம் தேதி டிக்கெட் ரத்தானது 7.5 லட்சமாக குறைந்துள்ளது என குறிப்பிட்டு இந்தியன் ரயில்வே பதில் அளித்துள்ளது.
டெல்லி : வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில்…
குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை…
டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…
சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…
டெல்லி : 'Son of Sardaar', 'Jai Ho' 2 என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட்…
கேரளா : கேரளாவில் 8 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)…