ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா இணைந்து உருவாக்கும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று மற்றும் நாளை நான்கு மாநிலங்களில் நடைபெறுகிறது.
கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதிலும் தனது வீரியத்தை குறையாமல் காட்டிக் கொண்டிருக்கும் கொரானா வைரஸ் தாக்கம் இந்தியாவில் சற்றே குறைந்து உள்ளது என்றே கூறலாம். இருப்பினும் இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் இந்த கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் குறித்த ஆராய்ச்சிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டே உள்ளது. பல இடங்களில் அவசரகால பயன்பாட்டிற்கான தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டு கொண்டும் உள்ளன.
இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா இணைந்து உருவாக்கியுள்ள இந்தியாவின் கொரோனா தடுப்பூசி தற்போது ஓரளவுக்கு முடிவடைந்து விட்டது என்றே கூறலாம். இந்நிலையில் இன்று மற்றும் நாளை அதாவது டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் உள்ள அசாம் ஆந்திரா, குஜராத், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில் இந்த தடுப்பூசிக்கான ஒத்திகை நடவடிக்கை நடைபெற உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் இந்த தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டிற்கான அங்கீகாரம் கிடைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…