தொழில்துறை வளர்ச்சிக்கு கொள்கை சீர்திருத்தம் தேவை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க, ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை, சுயசார்பு பாரதம் என்ற பெயரில் பல்வேறு பிரிவினரும் பலன் பலன் பெறும் வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார மீட்பு திட்டங்களை அறிவித்து வருகிறார்.
கடந்த மூன்று நாட்களாக இதுகுறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது நான்காவது நாளாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து, புதிய திட்டங்களை வெளியிட்டு வருகிறார். இன்றைய அறிவிப்பில், 8 துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளது.
அவர் பேசுகையில், நாட்டில் தொழில்துறை வளர்ச்சி பெற கொள்கை சீர்திருத்தங்கள் தேவை என்றும், நிறைய துறைகளில் விதிமுறைகள், பங்களிப்புகள் எளிமையாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர் என்றும் கூறியுள்ளார். மேலும், வளர்ந்துவரும் புதிய துறைகளை ஊக்கப்படுத்தும் திட்டங்கள் இன்று அறிமுகப்படுத்த இருக்கின்றனர் என்றும், பிறநாடுகளுடன் போட்டியிட நாம் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…