நந்திகிராமில் விதிமீறல்.., நீதிமன்றத்தை நாடுவோம்- மம்தா..!

Published by
murugan

தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து இதுவரை 63 புகார் செய்யப்பட்டும் தேர்தல் ஆணையம் மவுனம் காக்கிறது என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் தேர்தல் நடைபெற்றவுள்ளது. முதல்கட்டத் தேர்தல் 30 தொகுதிகளுக்கு கடந்த 27-ம்தேதி நடைபெற்றது. இதில், 80 சதவீத வாக்குகள் பதிவாகியது. இந்நிலையில், இன்று 30 தொகுதிகளுக்கு 2-ம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. இந்த 30 தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் உள்ளது.

இதையெடுத்து, நந்திகிராம் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியை மம்தா பானர்ஜி பார்வையிட்டார். அப்போது, உள்ளூர் மக்கள் வாக்களிக்க அனுமதி மறுக்கப்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் தெரிவித்தனர். பின்னர், வாக்கு சாவடிக்கு வெளியே ஆளுநருக்கு மம்தா பானர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இந்நிலையில், மேற்குவங்கம் நந்திகிராம் தொகுதியில் விதிமீறல்கள் பற்றி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கை இல்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து இதுவரை 63 புகார் செய்யப்பட்டும் தேர்தல் ஆணையம் மவுனம் காக்கிறது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் குண்டர்களால் மேற்குவங்கத்தில் அமைதி பாதிக்கும் அபாயம் என தெரிவித்தார்.

விதி மீறல் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்றத்தை நடுவோம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

“கண்டிப்பா ‘ரோலக்ஸ்’ இருக்கு!” ரெட்ரோ நிகழ்வில் லோகேஷ் கொடுத்த மாஸ் அப்டேட்!

“கண்டிப்பா ‘ரோலக்ஸ்’ இருக்கு!” ரெட்ரோ நிகழ்வில் லோகேஷ் கொடுத்த மாஸ் அப்டேட்!

சென்னை : சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்று ரெட்ரோ திரைப்படம் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு மத்தியில்…

38 minutes ago

“ஓய்வறியா உழைப்பினை முதலீடாக்கும் தொழிலாளர்கள்!” விஜய் வாழ்த்து!

சென்னை : இன்று மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும்…

1 hour ago

“திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள் தான்!” மு.க.ஸ்டாலின் பெருமிதம்! 

சென்னை : இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதலமைச்சர்…

2 hours ago

அமுல் பால் விலை ரூ.2 உயர்வு.., இன்று முதல் அமல்.!

சென்னை : இந்தியாவின் பிரபல பால் பிராண்ட்டாக திகழும் அமுல் தனது பால் விலையை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு மே…

2 hours ago

Live : மே 1 உழைப்பாளர் தினம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை: இன்று (மே 1, 2025) உலக உழைப்பாளர் தினம் (International Workers' Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்…

3 hours ago

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்தது.! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ஒவ்வொரு புதிய மாதம் தொடங்கியதும், மாதத்தின் முதல் நாள் அன்று பல மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன. வழக்கமாக…

4 hours ago