பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என மாநில அரசுகள் இயற்றிய சட்டத்திற்கு எதிரான வழக்குகளை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்.
பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என மாநில அரசுகள் சட்டத்தை இயற்றியது. இந்த சட்டத்திற்கு எதிரான வழக்குகளை டெல்லி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. இன்று நடைபெற்ற விசாரணையின் போது பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என சட்டம் ஏற்றிய மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே, பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என்று மேற்கோள்காட்டி பஞ்சாப், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் தனித்தனியாக சட்டங்களை இயற்றியிருந்தனர்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும் வகையில் இருந்தாலும், பெரும்பாலான மாநிலங்கள் பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என்று இருந்தது. சில மாநிலங்களில் சிறை தண்டனை, அபராதம் என விதிக்கப்பட்டது. அதாவது, பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள் என பொதுமக்களுக்கு இடையூறு மேற்கொள்ளும் வகையில் பிச்சை எடுப்பது என்பது கிரிமினல் குற்றமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அவர்கள் விருப்பத்தின் பெயரில் பிச்சை எடுப்பதில்லை, சூழ்நிலை காரணமாக தான் இத்தைகைய மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். எனவே, பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றமாக அறிவிப்பது என்பது அவர்களை மேலும் அழுத்தம் தர கூடியவையாக மாறும் என பல்வேறு பொதுநல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த வழக்குகளை விசாணைக்கு உச்சநீதிமன்ற ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…